அத்தியாயம் 15 – இரவில் ஒரு துயரக் குரல் (PS-2)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

சோழ நாட்டில் அக்காலத்தில் ஆடல் பாடல் கலைகள் மிகச் செழிப்படைந்திருந்தன. நடனமும், நாடகமும் சேர்ந்து வளர்ந்திருந்தன. தஞ்சை நகர் சிறப்பாக நாடகக் கலைஞர்கள் பலரைத் தோற்றுவித்தது. அந்த நாளில் வாழ்ந்திருந்த கருவூர்த் தேவர் என்னும் சிவநேசச் செல்வர் ‘இஞ்சி சூழ்’ தஞ்சை நகரைப் பற்றிப் பாடல்களில் கூறியிருக்கிறார்.

“மின்னெடும் புருவத்து இளமயிலனையார்
      விலங்கல் செய நாடகசாலை

 இன்னடம் பயிலும் *இஞ்சி சூழ் தஞ்சை” </div> 

(*இஞ்சி கோட்டை மதில்)

என்று அவருடைய பாடல்களில் ஒன்று வர்ணிக்கிறது. தஞ்சை நகரில் நாடகக் கலை ஓங்கி வளர்ந்ததற்கு அறிகுறியாக நாடக சாலைகள் பல இருந்தன. அந்த நாடக சாலைகளில் எல்லாம் மிகச் சிறந்த நாடக சாலை சக்கரவர்த்தியின் அரண்மனைக்குள்ளேயே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *