அத்தியாயம் 7 – காட்டில் எழுந்த கீதம் (PS-3)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

பூங்குழலி கோபத்துடன் ஓடுவதை நிறுத்தித் திரும்பி நின்ற அதே சமயத்தில், இருள் சூழ்ந்த அக்காட்டகத்தே, ஓர் இனிய கீதம் எழுந்தது.

“பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

 

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!” </div>

அந்தக் குரல் சேந்தன் அமுதனுடைய குரல் என்பதைப் பூங்குழலி உடனே அறிந்துகொண்டாள். கலகலவென்று சிரித்தாள். காலடிச் சத்தம் வந்த திசை வேறு என்பதைக்கூட அச்சமயம் அவள் மறந்து போனாள்.

“அத்தான்! நீதானா?”

“ஆமாம்! பூங்குழலி!”

“எங்கே இருக்கிறாய்? இப்படி வா!”

“இதோ வந்துவிட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே சேந்தன் அமுதன் அவள் முன்னால் வந்தான்.

“நன்றாய் என்னைப் பயமுறுத்தி விட்டாய்! எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்?”

“பூங்குழலி! உன்னைப் பார்ப்பதற்காகவும், உன் இனிய கானத்தைக் கேட்பதற்காகவும் தஞ்சையிலிருந்து பலநாள் பிரயாணம் செய்து வந்தேன். இங்கே வந்த பிறகும் உன்னைக் காணாமல் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்! தற்செயலாக உன்னைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன். ஏன் அப்படி ஓடினாய்? எங்கே, ஒரு கீதம் பாடு கேட்கலாம்!!”

“பாடுவதற்கு நல்ல இடம்; அதைவிட நல்ல சந்தர்ப்பம்!”

“நீ பாடாவிட்டால் நானே இன்னொரு பாட்டுப் பாடுகிறேன். இந்தக் காட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் மிருகங்களையெல்லாம் விழித்தெழுந்து ஓடச் செய்கிறேன், பார்!”

“பித்தா! பிறைசூடி பெருமானே அருளாளா!”

“போதும், அத்தான்! கொஞ்சம் பாட்டை நிறுத்து!”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *