அத்தியாயம் 23 – ஊமையும் பேசுமோ? (PS-4)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

அநிருத்தர் சற்று நேரம் பூங்குழலியை உற்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவளைக் கொண்டு வந்த தாதிமார்களை அருகில் அழைத்தார். அவர்களிடம் மெல்லிய குரலில் ஏதோ கேட்டார். அவர்கள் மறுமொழி சொன்ன பிறகு அந்த அறையை விட்டு அப்பால் போகச் செய்தார்.

ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “திருமலை! ஏதோ தவறு நேர்ந்திருப்பதாகத் தோன்றுகிறது!” என்றார்.

“ஆம், ஐயா! அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.”

“இவள் இளம் பெண் சுமார் இருபது பிராயந்தான் இருக்கலாம்.”

“அவ்வளவு கூட இராது”.

“நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதரசிக்குப் பிராயம் நாற்பது இருக்க வேண்டும்.”

“அதற்கு மேலேயும் இருக்கும்”

“ஆம், ஆம், நீ இலங்கைத் தீவில் மந்தாகினி தேவியைப் பார்த்திருக்கிறாய் அல்லவா?”

“ஆம்; ஐயா! பார்த்து, தங்கள் கட்டளைப்படி இங்கு அழைத்து வரவும் முயன்றேன், முடியவில்லை.”

“இந்தப் பெண் மந்தாகினி தேவி அல்லவே?”

“இல்லை, குருதேவரே! நிச்சயமாக அந்த அம்மையார் இல்லை!”

“அப்படியானால் இவள் யாராயிருக்கும்? எப்படி இங்கு வந்து சேர்ந்தாள்?”

“இவளையே கேட்டுவிட்டால் போகிறது!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“ஊமையிடம் கேட்டு என்ன பயன்?”

“குருத்தேவரே! இவள் ஊமைதான் என்பது…”

“அதைத்தான் தாதிமார்களிடம் கேட்டேன். இங்கு வந்ததிலிருந்து இவள் ஒன்றும் பேசவில்லை என்றார்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *